விவசாயத்துறை நாசம்

அரசாங்கத்தின் யூரியா உரக்கட்டுப்பாட்டு திட்டத்தினால் விவசாயத்துறை நாசமாகிப் போயுள்ளது என்று கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம். முபீத் விசனம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் 48ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் (24) இடம்பெற்றபோது திண்மக்கழிவகற்றல் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி பற்றி ஆயாயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் தவறான கொள்கைத் தீர்மானம் காரணமாக எடுக்கப்பட்ட உரக்கட்டுப்பாட்டு திட்டத்தினால் விவசாயத்துறை நாசமாகிப் போயுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது 40 ஆயிரம் ரூபாவுக்கு கூட உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. ஆகையினால், எமது மாநகர சபையினால் அன்றாடம் சேகரிக்கப்படுகின்ற உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு, பசளைகளை உறபத்தி செய்து, விவசாயிகளுக்கு நல்ல விலையில் அவற்றை விற்று, உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்ட சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் அப்துல் அஸீஸ், உரத்தட்டுப்பாடு நிலவி வருகின்ற இன்றைய சூழ்நிலையில் இயற்கை சேதனப் பசளைக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவற்றை மிகையாக உற்பத்தி செய்து எமது பகுதியிலேயே சந்தைக்கு விடுவோமாயின், விவசாயிகள் தாமே முன்வந்து, கொள்வனவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், எமது மாநகர சபைக்கு சொந்தமான பசளை உற்பத்தி நிலையத்தில் உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு, முடியுமானளவு பசளை உற்பத்தி செய்யப்பட்டு, வருகின்றது. அங்கு ஆளணி மற்றும் இயந்திர வசதிகளை மேம்படுத்தும்போது உற்பத்தியை இன்னும் அதிகரிக்க முடியுமாக இருக்கும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேதனப் பசளை உற்பத்தியை அதிகரித்து, விவசாயத்துறைக்கு பங்களிப்பு செய்வதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கான திட்டத்தை உடனடியாகத் தயாரித்து, அதனை அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளர் சட்டத்தரணி ரொஷான் அக்தரை, முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த அமர்வில் மற்றும் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் தேசிய காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினர் ஏ.எஸ்.ஹமீட் அவர்கள் முதன்முறையாக சபைக்கு வருகைதந்து, கன்னியுரை நிகழ்த்தினார்.

விவசாயத்துறை நாசம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House