
posted 17th March 2022

திருமதி சுஜாதா குலேந்திரகுமார்
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 452 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;
2020 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 433 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 452 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இதன்படி;
- மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 65 மாணவர்களும்
- வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 52 மாணவிகளும்
- சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் 57 மாணவிகளும்
- புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் 54 மாணவர்களும்
- மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 47 மாணவர்களும்
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்திபெற்றுள்ளனர்.
கல்விக் கோட்டத்தின் அடிப்படையில்;
- மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் 364 மாணவர்களும்
- மண் முனைப்பற்றுக் கோட்டத்தில் 73 மாணவர்களும்
- ஏறாவூர்ப்பற்றுக் கோட்டத்தில் 15 மாணவர்களும்
சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House