
posted 3rd March 2022
முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்துக்கு அருகில் நேற்று நபரொருவர் காணியை துப்பரவு செய்துள்ளார்.
இதன்போது அவரால் குறித்த கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் அங்கு ஆய்வுப் பணியை மேற்கொண்ட போது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டன.
இந்த நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House