
posted 31st March 2022
மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் இருளில் மூழ்கியது.
செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கியும் இயங்க மறுத்தது.
இதனால் தொலைபேசி வெளிச்சத்தின் மூலம் சேவைகள் இடம்பெற்றுள்ளன.
வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இவ்வாறு வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி உரிய முறையில் பராமரிக்கப்படாததன் விளைவே இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் குற்றஞ்சாட்டின.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House