
posted 3rd March 2022
மன்னார் மாவட்டத்தில் பெப்ரவரி மாதம் (02.2022) கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 560 பேர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் (02.2022) கடைசி நாள் அதாவது 28.02.2022 அன்று மன்னார் மாவட்டத்தில் 24 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நானாட்டான் வைத்தியசாலையில் 6 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையிலும், பேசாலை மற்றும் தலைமன்னார் வைத்தியசாலைகளிலும் தலா 4 தொற்றாளர்களும். முருங்கன் மற்றும் எருக்கலம்பிட்டி வைத்தியசாலைகளில் தலா 2 பேரும் விடத்தல்தீவு மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமே இவ் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மெதாத்தமாக 3944 பேர் கொவிட் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2022 ஆம் ஆண்டு 762 பேர் இவ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதுவரைக்கும் இறந்தவர்களின் தொகை 39 ஆகவே காணப்பட்டு வருகின்றது.
இவ் மாதம் (02.2022) வரைக்கும் கொவிட் முதலாவது தடுப்பூசி 82496 பேரும், இரண்டாவது தடுப்பூசி 76959 பேரும், பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி 12831 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 2725 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 35943 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளதாக இவரின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 2022.03.01 ந் திகதி செவ்வாய் கிழமை 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதனின் நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேருக்கும், முருங்கன், விடத்தில்தீவு மற்றும் வங்காலை ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்குமே இவ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதனின் நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House