
posted 31st March 2022
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபரும் தமிழர்களின் தந்தை செல்வா என வர்ணிக்கப்படும் தந்தை செல்வாவின் 124வது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் நகரின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (31.03.2022) காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, மன்னார் நகர சபை உப தவிசாளர் சூ. செபஸ்ரியான் ஜான்சன், சட்டத்தரனியும் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான எஸ். டினேஷ் ஆகியோர் தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதையும், இந் நிகழ்வில் தமிழ் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு தந்தை செல்வாவுக்கு அகவணக்கம் செலுத்தி மரியாதையும் செலுத்தினர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House