
posted 13th March 2022
மன்னார் மாவட்டத்தில் இம் மாதத்தில் (மார்ச்) 12ந் திகதி வரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 அக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து கொரோனா தொற்றால் மரணமும் 40 ஆக அதிகரித்துள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. வினோதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் மார்ச் மாதம் 12 ந் திகிதி வரை கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3998 பேர் பதிவாகியுள்ளனர்.
இந் நடப்பு வருடத்தில் (2022) 816 பேர் இத் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என பதிவாகியுள்ளனர். இவற்றில் இம் மாதம் (மார்ச்) 12 ந் திகதி வரை கொரோனா தொற்றாளர்கள் தொகை 54 ஆக உயர்ந்தள்ளது.
இவற்றில் 12 ந் திகதி 2 பேர் கொரோனா தொற்றாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் தலைமன்னார் மற்றும் பேசாலை ஆகிய வைத்திசாலைகளிலே இத் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் (12) ஒருவர் இத் தொற்றுக்கு உள்ளாகி இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இத் தொற்றுக்கு உள்ளாகி மன்னார் மாவட்டத்தில் மரணித்தவர்கள் தொகை 40 ஆக உயர்ந்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House