
posted 6th March 2022
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இப்பட்டமளிப்பு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வே. விவேகானந்தராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.
இப்பட்டமளிப்பு நிகழ்வின் முதலாம் நாள் அமர்வுகளுக்கு விஷேட அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ. உடவத்தவும், இரண்டாம் நாள் அமர்வுகளுக்கு விஷேட அதிதியாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே. கபில சீ.கே. பெரேராவும், கலந்து சிறப்பிப்பதுடன் விஷேட உரையும் ஆற்றவுள்ளனர்.
இவ்விழாவில் காலஞ்சென்ற முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்துக்கு கௌரவ விஞ்ஞான கலாநிதிப்பட்டமும், சீனித்தம்பி கோபாலசிங்கத்துக்கு கௌரவ இலக்கிய முதுமானிப் பட்டமும் வழங்கப்படவுள்ளது.
அத்தோடு முதல்நாள் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளதுடன், இதன்போது 883 மாணவர்களும், இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள மூன்று அமர்வுகளின் போது 1075 மாணவர்களுமாக முதுமானி, இளமானிப் பரீட்சைகளில் சித்திபெற்ற 1958 மாணவர்கள் தமக்கான பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House