பெண்கள்  மீதான  தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அடைக்கலநாதன்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்த நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொழுது, அந்த தாய்மார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளார்கள். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனை தான் வன்மையாக கண்டிக்கிறேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை நாட்டில் மக்களுக்கு அடிப்படையாக எந்த ஒரு சுதந்திரமும் இல்லை. ஆனால் பெயரளவில் ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்கின்றார்கள்.

இதே “ஜனநாயக நாட்டில்” அடிபட்டவர்களும், யுத்த இழப்புகளைச் சந்தித்து தினம் தினமாய் வீதிகளில் நின்று நியாயம் கேட்ட அம்மக்களைத்தான் பொலிஸ்படை தாக்கியுள்ளது. இந்தத் தாய்மார்களை மிலேச்சத்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தத் தாய்மார்கள் அனுபவிக்கும் அக் கொடூர வலியினை ஆட்சியில் உள்ளவர்களால் எவ்வளவுக்கு உணரமுடியுமோ தெரியாது. ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் பதில் சொல்லி ஆகவேண்டும்.

அன்றைய தினத்தில் தாய்மார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இனங்காணப்பட்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்று செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பெண்கள்  மீதான  தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அடைக்கலநாதன்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House