
posted 27th March 2022
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவிடம் வெள்ளிக்கிழமை (25) பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இந்த அமைச்சகத்திற்குரிய தேசிய திட்டமிடல் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், கொள்கை கற்கைகள் நிறுவனம், நிலையான அபிவிருத்தி சபை, கட்டுபாட்டாளர் நாயகம் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை கணக்குகள் மற்றும் தணிக்கை தரநிலைகள் கணக்கெடுப்பு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பயனாளிகள் சபை ஆகிய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 60 ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் குறைந்தபட்சம் 20 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றும் தெரியவந்தது.
அதற்கமைய மின் நெருக்கடியைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தவிர வேறு வழியில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித் குமாரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
2030 ஆண்டளவில் தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ள 28,200 ஜிகாவொட் மணிநேரத்தில், 19,800 கிகாவொட் மணிநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் தற்போதைய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கு தற்போது அமுலிலுள்ள மின்சார சபையின் 1969 சட்டத்தை திருத்தி தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான விநியோகத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் தாமதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய மின் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மின்சார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையில்லா மின்சாரம் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 6 மில்லியன் மக்கள் சமுர்த்தி சலுகைகளைப் பெறுகின்றனர். இதற்காக மாதாந்தம் சுமார் 62 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. சமுர்த்தி பெற வேண்டியவர்களுக்கு உண்மையில் சலுகைகள் கிடைக்கவில்லை எனவும் தேவையில்லாதவர்கள் சமுர்த்தி பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலைபேறான அபிவிருத்தி முன்னேற்றத்தை அளவிடும் தரவுகள் 46 குறிகாட்டிகள் மட்டுமே எனவும், அது இதுவரை 105 குறிகாட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தரவு அடிப்படையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை தற்போது 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, மேலதிக செயலாளர்களான ஏ.விமலவீர, டி.கே. விஜேசிங்க, பிரதமரின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணயக்கார, சனத்தொகை கணக்கெடுப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார, கட்டுப்பாட்டாளர் நாயகம் அலுவலகத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், கே.ஏ. ரம்யா காந்தி, அரசு மதிப்பீட்டுத் துறையின் முதன்மை மதிப்பீட்டாளர் பி.பி.டி.எஸ். முத்துக்குமாரண, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமது, கொள்கை கற்கை நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி துஷினி வீரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House