புதிய புத்தர் சிலைக்கு மலர் பூஜை செய்த பிரதமர்

களனிமுல்ல சதஹம் சிசில பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட 22 அடி உயர புதிய புத்தர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (13) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

காடிகாவத்த முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் குமார அவர்களினால் புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதமர் அவர்களினால் புதிய புத்தர் சிலைக்கு முதலாவது மலர் பூஜை நடத்தப்பட்டது.

இப் பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அத்தரகம பஞ்ஞாலங்கார தேரரின் 50ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் அவர்களினால் இதன்போது இப் பௌத்த நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் ரணவிரு மஹ சேயவில் பிரதிஷ்டை செய்வதற்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசம் வணக்கத்திற்குரிய அத்தரகம பஞ்ஞாலங்கார தேரரிடம் வழங்கப்பட்டது.

இந்த பௌத்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கு பங்களிப்பு செய்தவர்கள் இதன்போது பிரதமரினால் கௌரவிக்கப்பட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், நாராஹேன்பிட அபயாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தலைமை தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றனர்.

குறித்த நிகழ்வில் களனிமுல்ல இப்பௌத்த நிலையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேசவாசி பௌத்த பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய புத்தர் சிலைக்கு மலர் பூஜை செய்த பிரதமர்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House