
posted 31st March 2022
பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டி காயம் ஏற்படுத்தினர்.
பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கியை காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து மற்ற மாணவர்களும் இப்படி நடந்துகொண்டதாகவும் சக மாணவர்கள் மேலும் கூறினர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருவித உளவியல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House