
posted 25th March 2022
தேசிய பணி மூலோபாய விருது வழங்கும் விழா – 2022 கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் புதன்கிழமை (23) பிற்பகல் ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
உள்ளூர் விநியோகத்துறையில் சிறந்த பணியாற்றும் இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கம் (ளுடுகுகுயு) அத்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பங்குதாரர்களை அங்கீகரித்து ஒரு துறை என்ற ரீதியில் அந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கௌரவ பிரதமரை இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கத்தின் (ளுடுகுகுயு) தலைவர் திரு. தினேஷ் ஸ்ரீ சந்திரசேகர வரவேற்றார்.
ஆறு பிரதான பிரிவுகளின் கீழ் 40 இற்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டதுடன், 'லெஜண்ட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ்' (Legend of Logistics) விருது பெற்ற மொஹான் பண்டிதகே, ரொஹான் டி சில்வா, கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, ஹனிப் யூசுப் மற்றும் டிரோன் ஹோலோ ஆகியோருக்கு பிரதமரினால் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மூலோபாய மற்றும் சர்வதேச சரக்கு அனுப்புவோர் சங்கத்தின் (ளுடுகுகுயு) தலைவர் தினேஷ் ஸ்ரீ சந்திரசேகர மற்றும் சங்கத்தின் (ளுடுகுகுயு) உறுப்பினர்களும் பலரும் கலந்துகொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House