பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற பங்களாதேஷின் 51வது சுதந்திரதினக் கொண்டாட்டம்

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (26) கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதோடு. அது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக அமையப்பெற்றிருந்தது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி.திஸாநாயக்க, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம், இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரிய, வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற பங்களாதேஷின் 51வது சுதந்திரதினக் கொண்டாட்டம்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House