
posted 20th March 2022

பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படித்தன் மூலமே சிறந்த சித்தி அடைய முடிந்ததென யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியான 193 புள்ளிகளைப் பெற்ற மாணவன் சுதர்சன் அக்சஜன் தெரிவித்தார் .
நேற்று வெளியிடப்பட்டபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 193 புள்ளிகளைப் பெற்று சிறப்புச் சித்தியை பெற்ற சுதர்சன் அக்சஜன் மேலும் கூறுகையில்;
நான் பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படிப்பேன். அவ்வாறு படிப்பதன் மூலமே நான் சிறந்த பெறுபேற்றைப் பெற்று கொண்டேன். நான் எதிர்காலத்தில் ஒரு விமான பொறியியலாளராக வரவேண்டும் என்பது எனது இலட்சியமாகவுள்ளது. சிறப்பு தேர்ச்சி பெறுவதற்கு எனது பெற்றோர் மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே காரணம் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House