
posted 30th March 2022
வவுனியா கூமாங்குளத்தில் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைய கூமாங்குளத்தில் உள்ள வெற்றுக்காணியில் இருந்தே 18 மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 32வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த மரக்குற்றிகள் மடுவில் இருந்து சட்டவிரோதமான முறையிலே வெட்டப்பட்டு காட்டுப்பகுதியின் ஊடாக கடத்தபட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பண்டாரிக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House