
posted 12th March 2022
வடமராட்சி கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் 10 பவுண் நகை பட்டப்பகலில் வீட்டின் ஓடு கழட்டி களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (11) மதியம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலால் திரும்பி வீடு வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரித்து காணப்பட்டுள்ளது. இதனால் பதட்டமடைந்த வீட்டுக்காரர்கள் வீட்டுக்குள் இருந்த நகைகள் வைத்த இடத்தில் பார்த்த போது 10 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் நெல்லியடி போலீஸ் நிலைத்தில் வீட்டின் உரிமையாளராகவும முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House