
posted 13th March 2022

தீவக பெண்கள் வலையமைப்பால் சர்வதேச பெண்கள் தினம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது.
புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புங்குடுதீவு பனை பொருள் போதனாசிரியர் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக புனித சவேரியார் ஆலய பங்கு தந்தை ரமேஷ் அடிகளார், புங்குடுதீவு இந்து மதகுரு முரளிதர சர்மா, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, மன்னார் சட்டத்தரணி புராதனி, அருட்தந்தை கலாநிதி ஜோன் போல், பிரதிபலிப்பு சிகிச்சையாளர் ப. நிர்மலன் வேலணை கிராம சேவையாளர் பத்மசிறி கனகரெத்தினம் நோனா வின்சன், சமூக சேவையாளர் புங்குடுதீவு மற்றும் தீவக பெண்கள் அமைப்பினர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மாணவ மாணவியரின் அழகிய கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகம் என்பனவும் இடம்பெற்றன.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House