
posted 14th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி கூட்டம் நேற்று (13) நடந்தது
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (13) வியாழன் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் நடந்த இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
விவசாயம், காணி, மகாவலி அதிகார சபை, வனவளத் திணைக்களம், நன்னீர் மீன்பிடி , கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகநாதலிங்கம், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் குணபாலன், வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)