
posted 12th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டு. புனித மைக்கல் கல்லூரி புதிர்ப்போட்டியில் முதலிடம்
நாடளாவிய ரீதியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு காணப்படும் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட இரசாயன புதிர்ப்போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.
201 பாடசாலைகள் பங்குபற்றிய இந்தப் போட்டியில் 12 பாடசாலைகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் புனித மைக்கல் கல்லூரி வெற்றி பெற்றது.
கல்லூரியின் வரலாற்றிலே இரசாயன புதிர்ப்போட்டியில் இக் கல்லூரி வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களையும் இம்மாணவர்களை பயிற்றுவித்த இரசாயனவியல் ஆசிரியர்களான திருமதி பீ. கிருபாகரன் மற்றும் திருமதி பீ. சுகுணன் ஆகியோருக்கு அதிபர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)