
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புதிய அதிபர் காரியாலயம், நடைபாதை திறந்து வைப்பு
மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய அதிபர் காரியாலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களுக்கு இடையிலான நடைபாதை ஆகியவற்றை திறந்து வைக்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கிய ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய அதிபர் காரியாலயம் மற்றும் வகுப்பறை கட்டடங்களுக்கு இடையிலான நடைபாதை ஆகியவற்றை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
'கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா' எனும் தொனிப்பொருளில், மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம். ஐ. எம். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீம், காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுல நாயகி சஜிந்திரன், காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் உள்ளிட்ட விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)