
posted 1st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நினைவேந்தல் நிகழ்வும் நீதி கோரும் போராட்டமும்
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 31.05.2024 மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் எற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் வடக் கு கிழக்கு ஊடக அமைப்புக்கள் என பலரும் பற்கேற்றனர்
இதன்போது மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நிகழ்வு அனுஸ்ட்டிக்கப்பட்டதோடு பின்னர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய போராட்டமும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)