
posted 19th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பொது வேட்பாளரை தனிக்கட்சி தீர்மானிக்க முடியாது
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தனி ஒரு கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்களை ஒட்டுமொத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)