
posted 10th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமைகள் செயல்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
புனித மரியாள் தேவாலயத்தில் அமைந்துள்ள அன்னாரின் சமாதியில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட ஆயுதக்குழுவால் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)