
posted 26th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
50 நாட்களில் பொத்துவிலை அடைந்த பாதை யாத்திரீகர்கள்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி - கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 50 ஆவது நாளில் பொத்துவிலை அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11ஆம் திகதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் கடந்த 50 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை ஆறாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்தார்கள்.
இன்று புதன் கிழமை பொத்துவிலை அடைந்த குழுவினர் பாணமையை அடைந்து சன்னியாசி மலையில் தங்குவர்.
அதன் பின்பு உகந்தை மலையை அடைய இருக்கின்றார்கள். 30ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)