
posted 22nd June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
முருங்கனில் கோர விபத்து வயோதிபப் பெண் மரணம்
ஹயஸ் வான் - மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத் தாழ்வுப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நேற்று (22) வெள்ளி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
கல்முனையிலிருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்துக்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனமே இவ்வாறு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் எனத் தெரியவருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

முருங்கனில் கோர விபத்து வயோதிபப் பெண் மரணம்