
posted 7th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற இரு விழிகளையும் இழந்த மாணவன்
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரஷோபன் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 2ஏ, 1பீ, சித்திபெற்று ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக சித்தியடைந்துள்ளார்.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாசாலையிலும், கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரியிலும் இவர் கல்வி பயின்றுள்ளார்.
இம் மாணவனின் சாதனையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலய கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளரும்,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரக்குமார் தலைமையில் இடம்பெற்ற பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் மாணவனின் தாய், கல்விப்ரபணிமனை உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)