Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

எந்தவொரு சுற்றுச்சூழல் சட்டத்தையும் தலைகீழாக மாற்ற வேண்டாம்

சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

தற்போதைய சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு காலநிலை மாற்ற சட்டத்துடன் புதிய சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

'இரண்டு வருட முன்னேற்றம் மற்றும் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் அவசர வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

''சுற்றாடல் அமைச்சின் இரண்டு வருட முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் போது எமது அமைச்சின் செயற்பாடுகள் ஏனைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்று ஒரேயடியாக வெளித்தெரிவதில்லை. ஆனால், ஒரு அமைச்சு என்ற வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பல பணிகளைச் செய்துள்ளோம். மேலும் பல முக்கிய பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

அண்மையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து, நாடளாவிய சுற்றுச்சூழல் வாரத்தை அறிவித்தோம். அதைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தற்போதைய 29% காடுகளின் அளவை 2030இற்குள் 32% ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். இதற்காக குறிப்பாக காடுகளிலுள்ள வெற்றிடப் பகுதிகளில் மரம் நடுவதற்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 'மரத்துக்கு ஒரு செடி ' திட்டத்தின் கீழ் அகற்றப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக மரம் நடப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிக கவனத்துடன் செயற்பட்டு வருகின்றார். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்றப்படும் எந்த சட்டத்தையும் எக்காரணம் கொண்டும் தலைகீழாக மாற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய சுற்றுச் சூழல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு, காலநிலை மாற்ற சட்டத்துடன் புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும், நாட்டின் பெறுமதிமிக்க கனிம வளங்களை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அவசர வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் பி. கே. சந்திரகீர்த்தி

''நிலையான அபிவிருத்தியடைந்த இலங்கை' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த இரண்டு வருடங்களில் பல பணிகளை செய்து வருகிறது. அதற்கிணங்க, சேதமடைந்த சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரத்தினபுரி அருங்காட்சியகப் பகுதியிலுள்ள பல்லுயிர்ப் பூங்கா, புந்தல பத்திரஜவெல மற்றும் கித்துல்கல பெலிலென ஆகிய இடங்களை பல்லுயிர் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் ஊடுருவும் உயிரினங்களை கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர்ப் பன்மையின் நிலையான பாதுகாப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில், நமது நாடு சதுப்பு நிலப் பாதுகாப்பில் உலகளாவிய முன்னோடி என்ற விருதைப் பெற்றது.

சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு மற்றும் இரசாயன முகாமைத்துவப் பிரிவானது சுற்றுச் சூழலுக்கு உகந்த முகாமைத்துவம் மற்றும் பாலிகுளோரினேட்டட் பைபினைல் கழிவுகள் மற்றும் பாலிகுளோரினேட்டட் உபகரணங்களை அகற்றுதல், அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த முகாமைத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், ஆசிய - பசிபிக் நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் அதன் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முகாமைத்துவம் செய்யும் திறன் மேம்பாட்டுத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கூடுதலாக, மினமாட்டா மாநாட்டின் குறிப்பிட்ட சர்வதேச திட்டத்தின் கீழ் பாதரசம் கொண்ட மற்றும் பாதரசம் கலந்த கழிவுகளை குறைக்க தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இரசாயனங்கள் மற்றும் கழிவுகளை முறையான முகாமைத்துவத்திற்கான நிறுவன வலுவூட்டலுக்கான செயற்திட்டம் மற்றும் "விவசாயம் துறையில் பயன்படுத்தப்படும் தொடர்ச்சியான இரசாயன மாசுக்கள் மற்றும் பாதரசம் மற்றும் இலங்கையில் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அகற்றுவதற்கான" திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், "பசுமைப் பாடசாலைகள், பசுமை நிறுவனங்கள் மற்றும் பசுமை மருத்துவமனைகள்" என்ற கருத்திட்டம் குறித்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் குறித்த தேசிய தொடர்பாடல் வேலைத் திட்டத்தின் ஆரம்பம், தியவன்னா ஓயாவின் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் நிலைமையை மேம்படுத்துதல், அத்துடன் இலங்கையில் மின்சார மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை மிக விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலதிக செயலாளர் ஆர். டி. எஸ் ஜயதுங்க (சுற்றுச்சூழல் அபிவிருத்தி)

''காலநிலை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே பல அவசர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், விவசாயம், காடுகள் மற்றும் ஏனைய நிலப் பயன்பாட்டுத் துறையில் மேம்பட்ட வெளிப்படைத்தன்மைக்கான கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான திட்டம் (CBIT/AFOLU) தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டிற்காக இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது இரு வருட வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் மற்றும் நான்காவது தேசிய தொடர்பாடல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் தேசிய தழுவல் திட்டத்தின் (NAP) அமுலாக்க செயல்முறை மற்றும் திறன் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தை மாகாண அபிவிருத்தியுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் மாகாண தழுவல் திட்டங்களை தயாரித்தல் மற்றும் மாகாண அபிவிருத்தி திட்டங்களில் காலநிலை மாற்றத்தை உள்ளடக்குதல் ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலதிக செயலாளர் டபிள்யூ. டி. எஸ். சி வெலிவத்த (இயற்கை வளங்கள்)

''சுற்றுச்சூழல் அமைச்சின் இயற்கை வளப் பிரிவு தற்போது ஆரோக்கியமான நிலப்பரப்பு திட்டம் - 2021-2024 மற்றும் பாலைவனமாவதைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கொழும்பில் காற்று மாசுபாட்டினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து வளியின் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் பிரான்ஸ் அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆதரவின் கீழ் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் வெணுர பெர்னாண்டோ:
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக, எத்தனை விதிகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும், 'சுற்றுச்சூழல் கலாச்சாரத்தை' உருவாக்காமல், நாம் எதிர்பார்க்கும் பெறுபேறுகளை எட்ட முடியாது. அதற்கான வேலைத் திட்டங்கள் பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும், ஆசிரியர் பயிற்சிக் கலாசலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நமது நூலக வசதிகளை மேம்படுத்தவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் இது ஒரு தகவல் மையமாக முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய சுற்றாடல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சியாக ஆண்டுதோறும் 'ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது' வழங்கப்படுகிறது.

மேலும், சிவனொளிபாத மலையுடன் தொடர்புடைய கழிவு முகாமைத்துவத்திற்கான தனித்துவமான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மேற்கு, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 97 மையங்களில் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 'ஏத்தலைக்குளம் ஏரி மற்றும் வர்ணகலவத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகள்' என பிரகடனம் செய்து, இலங்கையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் சுற்றுச்சூழல் நட்பு ரயில் நிலையங்களாக மாற்றுதல் உட்பட பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சுற்றாடல் முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1981 என்ற தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் அமுலில் உள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் சுற்றாடல் முறைப்பாடுகள் பிரிவை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், இலங்கையை உள்ளடக்கிய மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டை நடத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான ஆரம்ப கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கித்சிறி மஞ்சநாயக்க

''உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் நமது நாட்டின் கனிம வளங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை உரிய நிறுவனங்களுடன் எந்தவித இடையூறு இன்றியும் தாமதம் இன்றியும் செய்து கொடுக்க நாங்கள் நேரடியாகத் தலையிட்டு வருகிறோம்.

மேலும், தற்போது தொடங்கப்பட்டுள்ள கனிம வள முகாமைத்தும் தொடர்பான அனைத்து அம்சங்களையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், உலகின் எந்த நாட்டிலிருந்தும் நமது கனிம வளம் மற்றும் அது தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற முடியும். இதன்மூலம், இலங்கையின் பெறுமதிமிக்க கனிம வளங்களை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை காலநிலை நிதிய நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 12.06.2026

Read More