
posted 13th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அனலைதீவு மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவை சேர்ந்த மீனவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (10) மாலை கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களான திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் காணாமல் போயிருந்தனர். படகு பழுதடைந்தமையால் தத்தளித்த இவர்கள் தமிழ்நாட்டின் நாகபட்டினம் மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அவர்கள் இருவரையும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்தனர்.
இதன்போது அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அவர்களை இலங்கை அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)