
posted 23rd June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
விபத்தில் உயிரிழந்த இளைஞன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடியவட்டை பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.
சின்னவத்தையில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், 23 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)