
posted 20th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிய சந்நிதியான் ஆச்சிரமம்
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று முன்தினம் 18/06/2023 மலையகம் பூனாகலை - கபரகலை கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மாணவர்களிற்கு ரூபா 200,000 பெறுமதியான பாடசாலைச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மலையக சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இரண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இச் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது ஆச்சிரம தொண்டர்களுடன் சென்று வழங்கிவைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)