
posted 11th June 2023
உங்கள் உறவுகளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
தேசிய சுற்றாடல் வார நிகழ்வு
தேசிய சுற்றாடல் வாரத்தின் "நீர் வளங்களை பாதுகாப்போம்" எனும் தொனிப் பொருளின் கீழ் நிந்தவூர் பிரதேசங்களின் நீர் நிலைகளில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை சுத்தம் செய்யும் வேலைத் திட்டமானது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் டி. பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சுற்றாடல் கழக மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)