
posted 4th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
தீயில் வர்த்தக நிலையம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை (03) வர்த்தக நிலையமொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கே இவ்வாறு தீ கை்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
யாழ். மாநகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோதும் தீப்பரவலால் வர்த்தக நிலையம் சிறிய அளவில் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக நிலையத்துக்கு விஷமிகள சிலர் தீ வைத்திருக்கலாமென வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருடன் இணைந்து தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)