
posted 17th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கௌரவிக்கப்பட்ட ஜெயந்த ரத்னாயக்க
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை நிகழ்வு நேற்று (16) இடம்பெற்ற நிலையில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி. ஜெயந்த ரத்னாயக்க பொலிஸ் ஆலோசனைக் குழுவினால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
எதிர்வரும் சில தினங்களில் இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச்செயலாளரும், காணி மத்தியஸ்த சபை மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)