
posted 6th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கைதிகள் விடுதலை
பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் இருந்து 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை சிறைச்சாலை பிரதம சிறை காவலர் ஆர். மோகனராஜா தலைமையில் நடைபெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில், சிறுகுற்றம், தண்டப்பணம் செலுத்தாத இரு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட சிறையிலிருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்று பிரதம சிறை காவலர் பிரபாகரன் தெரிவித்தார். விடுதலையானவர்களில் ஒரு பெண் கைதியும் அடங்குவார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)