
posted 11th June 2023
உங்கள் உறவுகிளின் துயர் பகிருங்கள் - Share your grief of loved ones
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள் - Share your bereavement
உதவித்திட்டம் வழங்கி வைப்பு
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியை நேற்று ஞாயிற்றுக்கிழமைவழங்கி வைத்தன.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கே இவ்வாறு, கல்வியை தடையின்றி தொடர்வதற்கான உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் குறித்த மாணவி கல்வியை தொடர்வதற்கு மாதாந்தம் ஐந்தாயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் இயக்குனர் திரு. ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளையினர் மற்றும் பயனாளி போன்றோர் பங்குபற்றினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)