
posted 21st June 2023
உறவுகளின் துயர் பகிர
உறவுகளின் துயர் பகிர
44 மாணவர்கள் இந்தியா பயணம்
சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற இலங்கையில் இருந்து 44 மாணவர்கள் புதன்கிழமை (21) இந்தியாவுக்குப் பயணமானார்கள்.
இந்தியாவின் சென்னையில் எதிர்வரும் 25.06.2023 ஆம் திகதி இந்த சர்வதேச அபாகஸ் போட்டி இடம்பெறவுள்ளது.
ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 07 ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேரே இவ்வாறு இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று இவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுள் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவர்கள் 4 பேர் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)