
posted 8th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
விபத்துக்கு உள்ளான படகு - பயணிகளை மீட்ட கடற்படை
நெடுந்தீவுக்கு சென்ற படகு இறங்குதுறைக்கு அருகே விபத்துக்கு உள்ளானது. இதன்போது, 38 பயணிகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
நேற்று (07) புதன்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றியவாறு 38 பேருடன் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கடல் அலையின் தாக்கத்தால் படகின் அடிப்பகுதி தரையுடன் மோதியது.
இதில், படகு சேதமடையவே கடல்நீர் படகின் உள்ளே சென்றது. இதையடுத்து படகை செலுத்தியவர்கள் கடற்படையிடம் உதவி கோரினர்.
விரைந்த கடற்படையினர், சிறிய படகுகளின் உதவியுடன் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுக் கரைக்கு அனுப்பினர். அத்துடன், படகுடன் அதிலிருந்த பொருட்களையும் பாதிப்பின்றி கரைக்கு கொண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)