
posted 28th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டத்தில் தகுதி இருந்தும் தெரிவு செய்யப்படாது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெளியிலிருந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பிரதேச செயலக கதவைத் திறந்து பிரதேச செயலக வளாகத்தில் நுழைந்து அங்கும் சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். விதவைகளாக இருக்கின்றோம். அன்றாட கூலி வேலை செய்து சாப்பாடுவதற்கு கூட கஷ்டப்பட்டு வாழ்கின்றோம். தற்போது மின்சார கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கஷ்டப்படும் நமக்கு அரசாங்கமும், அதிகாரிகளும் தீங்கிழைத்துள்ளனர் என ஆவேசத்துடனும், கவலையுடனும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)