கதிர்காம பாதயாத்திரை

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கதிர்காம பாதயாத்திரை

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் ஆறாம் திகதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்துக்குள் பிரவேசித்தனர்.

கடந்த 26 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து 1ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

31ஆம் திகதி, புதன்கிழமை இரவு மண்டூர் கந்தசாமி ஆலயத்தில் தரித்து நின்ற அவர்கள் வியாழக் கிழமை (01) காலை மண்டூர்- குறுமண்வெளி ஆற்றை பாதையால் கடந்துவந்து களுவாஞ்சிக்குடியை அடைந்தனர் .

1ஆம் திகதி பகல் கல்லாறு கடலாச்சி அம்மன் ஆலயத்தை தரிசித்து இரவு பெரிய நீலாவணை நாககன்னி ஆலயத்தில் நின்றனர். வெள்ளிக்கிழமை (02) கல்முனை ஊடாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை உகந்தை மலையை அடைய இருக்கின்றார்கள். 12ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசித்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை வெற்றிகரமாலத் தொடர இருக்கின்றார்கள்.

கதிர்காம பாதயாத்திரை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)