
posted 26th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கதிர்காம அடியார்களுக்கு இலைக்கஞ்சி
கதிர்காம காட்டுப் பாதை வழியாக கதிர்காமம் செல்லும் அடியார்களுக்கு, முதல் நாள் முதல் தரிப்பிடமான வாகூரவெட்டையில்( வண்ணாத்திர கிணற்றடி) இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
பிரபல சமூக சேவையாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
அவர் தலைமையிலான குழுவினர் காட்டுக்குள் இவ் இலைக்கஞ்சியை காய்ச்சி சுடச்சுட வழங்கினார்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)