
posted 5th June 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
அமரர் சிவசிதம்பரத்தின் 21வது நினைவேந்தல் இன்று இடம் பெற்றது
அமரர் சிவசிதம்பரத்தின் 21 வது நினைவேந்தல் இன்று (05) திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு சதுக்கத்தில் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய செயலாளர் இ. ராகவன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடர் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி எஸ் பொன்னம்பலம் ஏற்றி வைக்க தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது. அமரரின் உருவச் சிலைக்கு அவருடன் இறுதிவரை உடன் இருந்த தங்க முகுந்தன் பொன்னாடை போர்த்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரான எஸ் சுகிர்தன் முன்னாள் அதிபர் இ ராகவன், லண்டனைச் கே. நடராசாஉள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தனர். பின் அனைத்துதரப்பினரும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதியாக இடம்பெற்ற அஞ்சலி உரையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலருமான எம்.கே சிவாஜிலிமக்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், திருமதி நடராசா உட்பட அரசியல் பிரமுகர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து உரை நிகழ்த்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)