சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் அரிசி விற்பனை நிலையம் மற்றும் களஞ்சியசாலைகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கையின் போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையினை விட மேலதிகமாக விலைகளை குறித்து விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர்களினால் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அரச விலைக் கட்டுப்பாட்டுக்கு அரிசியினை விற்பனை செய்வது கூடிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

இச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY