சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவச் சிப்பாய் தற்கொலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுமந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணவச் சிப்பாய் ஒருவரே இன்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுமந்திரன் எம்.பி.யிடம் வினவியபோது குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

சுமந்திரன் எம்.பி. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த மே-9 ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து சகல பாராளுமன்ற உறுப்பினர்கலின் வீடுகளுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

குறித்த பாதுகாப்பு எனது வீட்டுக்கு தேவையில்லை என நான் மறுத்திருந்தபோதிலும் வீட்டுக்கு அருகே இராணுவ வீரர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வந்தனர்.

அவ்வாறு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார், என்றார்.

சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவச் சிப்பாய் தற்கொலை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY