
posted 29th June 2022
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்ற இவ்வேளையில் மன்னாருக்கு வருகின்ற எரிபொருளை பங்கீட்டு அட்டையின் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை மன்னார் நகர் பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பாக மன்னார் நகர் பிரதேச செயலகம் தெரிவித்திருப்பதாவது;
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான தற்போதைய பற்றாக்குறை நிலைமை காரணமாக பங்கீட்டு அட்டையில் எரிபொருள் வழங்குவதற்கு ஏதுவாக எரிபொருள் விநியோக அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், எரிபொருள் விநியோக அட்டை வழங்கலின் போது பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதாவது வாகன உரிமையாளர்களே இவ் விநியோக அட்டைகளை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ் விநியோக அட்டையை பெறுவதற்கு வரும்பொழுது குடும்ப அட்டை, வாகன உரிமைப்பத்திரம், வாகன உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை மற்றும் நடப்பு வருட வரி அனுமதிப்பத்திரம் ஆகியவை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY