41 ஆண்டு நினைவேந்தல் தீயுட்டப்பட்ட யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்

தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பொதுநூலகம்1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

41 ஆண்டு நினைவேந்தல் தீயுட்டப்பட்ட யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY