
posted 31st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நற்பிட்டிமுனை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பை
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை குளப்பகுதியில் தினமும் ஆடு, மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கிச் செல்லும் பழைய இலங்கை மின்சார சபை வீதியிலுள்ள குளக்கரையில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமல்லாமல் அந்தச் சூழல் பாதிக்கப்பட்டு மாசடைந்துள்ளது.
இதனை அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள் பல தடவைகள் கல்முனை மாநகர சபையிடமும் பொதுச் சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க கல்முனை மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)