Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது நல்லது - விக்னேஸ்வரன் எம். பி.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுச் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மையே. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் எவரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால், அவர்கள் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற முனைப்பு காட்டுவார்கள். அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் எவரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாத நிலைமை ஏற்படும் போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும்.

ஏற்கனவே நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாது போனால் நாடு மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அத்துடன், தேர்தலுக்காக பெருமளவான நிதிகள் செலவழிக்கப்பட வேண்டிய நிலைமையும் ஏற்படும். அதுவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)