
posted 5th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது
பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 பிரதேசத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான பொத்துவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் பொத்துவில் நகர பகுதியில் 26 வயதுடைய ஒருவரை 350 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும் சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரை 200 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைது செய்தனர்.
அதேவேளை, அறுகம்பை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து உல்லை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் இந்த வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)