
posted 15th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
போத்தல் குடிதண்ணீர் விற்பனைக்குத் தடை
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விற்பனையை நிலையங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் விற்பனை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இக் குடிதண்ணீரை அருந்துந்துவதால் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வரும் பொதுமக்கள் கிணறுகள், குழாய்கள் மூலம் பெறப்படும் நீரை அருந்துமாறு அவர் கேட்டுள்ளார். அக்கரைப்பற்று, சம்மாந்துறை , பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய நகர் பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் உணவகங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீர் விற்பனை தொடர்பாக சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனைக் குழுவின் அறிவுரைக்கமைய அதற்கெதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ககை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)